பட்டாம்பூச்சி போல வந்த ஐஸ்வர்யா ராய்..!



திரைப்பட விழாவில் பட்டாம்பூச்சி போல வந்த ஐஸ்வர்யா ராய்.

இந்த திரைப்பட விழா கேன்ஸ் பிரான்ஸில் நடக்கிறது. இதில் பாலிவுட் நடிகை ஐஸ்வர்யா ராய் மகள் ஆராத்யாவுடன் பங்கேற்றார். சிவப்புக் கம்பளத்தில் அவர் ஒய்யாரமாக நடந்து அனைவரையும் கவர்ந்துவிட்டார்.



கேன்ஸ் திரைப்பட விழா சிவப்புக் கம்பளத்தில் ஐஸ்வர்யா ராய் பட்டாம்பூச்சி போன்ற உடை அணிந்து அழகாக நடந்தார். அவர் உடை அனைவரையும் கவர்ந்துவிட்டது.



ஃபேஷன் என்று வந்துவிட்டால் தான் முன்னோடி என்பதை ஐஸ்வர்யா ராய் நிரூபித்துவிட்டார். தனது உடல்வாகிற்கு எந்த உடை பொருந்தும் என்பதை புரிந்து கொண்டு அணிந்துள்ளார்.



ஐஸ்வர்யாவின் மகள் ஆராத்யா சிவப்பு நிற கவுன் அணிந்து அழகாக இருந்தார். அவர் வெட்கப்பட்டுக் கொண்டே புகைப்படங்களுக்கு போஸ் கொடுத்தார்.



ஆனால் இவ்விழாவில் பங்கேற்ற நடிகை தீபிகா படுகோனேவின் சில உடைகள் நன்றாக இல்லை என விமர்சனம் செய்தனர்.



Previous Post Next Post