சிறுமி ஒருவர் பொம்மை துப்பாக்கி என நினைத்து நிஜ துப்பாக்கியால்,விளையாட்டுதனமாய் தனது தாயை சுட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேற்கு வங்க மாநிலம் ஹூக்ளி மாவட்டத்தில் கானாகுல் பகுதியை சேர்ந்தவர் காகோலி ஜனா.இவர் தனது வீட்டு தோட்டத்தில் இருந்து ஒரு துப்பாக்கியை எடுத்துள்ளார். இதை பொம்மை துப்பாக்கி என்று எண்ணி வீட்டிற்குள் சென்று தனது மகளிடம் கொடுத்துள்ளார்.
பின் அந்த துப்பாக்கியை வைத்து விளையாடிய சிறுமி விளையாட்டாய் தனது தாயை பார்த்து துப்பாகியால் சுட்டுள்ளார்.ஆனால் அந்த துப்பாக்கியில் இருந்த வெளிவந்த தோட்டா தாயின் உடம்புக்குள் பாய்ந்தது.

இதனால் தாய் காகோலி ஜனா பலத்த காயமடைந்து மயங்கியுள்ளார். பின்னர் அருகில் இருந்தவர்களால் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மேலும் இந்த சம்பவத்தால் அந்த சிறுமி மிகுந்த அதிர்ச்சியில் உள்ளதாகவும் ,அவரது தாயின் நிலைமை மோசமாக உள்ளதாகவும் விசாரணை மேற்கொண்டு வரும் போலீசார் தெரிவித்தனர்.