அமெரிக்காவில் உள்ள ஓரியன் ஸ்பேன் என்ற நிறுவனம் ஆடம்பர ஹோட்டல் ஒன்றை விண்வெளியில் நிறுவ உள்ளதாக அறிவித்துள்ளது.
இந்த ஹோட்டலில் தங்குவதற்கு இந்திய ரூபாயில் சுமார் 61 கோடி எனவும் கூறப்படுகின்றது.

ஹோட்டல் கட்டுமானப் பணிகள் மிக விரைவில் தொடங்கவுள்ளதாகவும், 2021-ம் ஆண்டு முழு கட்டமைப்புப் பணிகளும் முடிந்துவிடும் என்றும் அதன் பின் பயணிகள் தங்க அனுமதிக்கப்படுவார்கள் எனவும் கூறப்பட்டுள்ளது.
மேலும் இது குறித்து பேசிய அந்நிறுவனத்தின் சி.இ.ஓ ஃபரான்க் பன்கெர் (Frank Bunger) `விண்வெளியிலிருந்து பூமியைப் பார்க்கப் பலருக்கும் கனவு உண்டு இதை நிஜமாக்கவே இந்த முயற்சி என்றும் கூறியுள்ளார்.
மனிதர்கள் தங்கள் வாழ்வில் ஒரு முறையாவது இந்த வாய்ப்பை அனுபவிக்க வேண்டும் என தாங்கள் நினைத்ததால், விண்வெளியில் அரோரா என்ற ஸ்பேஸ் ஸ்டேஷன் ராக்கெட் வடிவில் இருக்கும் இந்த ஹோட்டல் கட்டப்பட உள்ளதாக குறிப்பிட்டுள்ளார்,
அதோடு பூமியிலிருந்து 320 கிலோ மீட்டர் தூரத்தில் இந்த ஸ்பேஸ் ஸ்டேஷன் கட்டப்பட உள்ளது.
இந்த விண்வெளி ஹோட்டலில் தங்க ஒரு பயணத்தின்போது 6 பயணிகள் உள்பட தங்கள் குழுவை சேர்ந்த இரண்டு பேர் அனுமதிக்கப்படுவார்கள் என்றும், மனிதர்களை அழைத்துச் செல்லும் முன் அவர்களுக்குத் தக்க பயிற்சி அளிக்கப்பட்ட பிறகே அனுமதிக்கப்படுவார்கள் என்றும் அவர் கூறியுள்ளார்.
அங்கே புவியில் இருப்பது போன்று சாதாரணமாக இருக்கலாம் என்றும் . இதற்காக அங்கு செயற்கை புவியீர்ப்பு விசை உருவாக்கப்பட உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
12 நாள்கள் வரை பயணிகள் அங்கே தங்க அனுமதிக்கப்படுவார்கள். அவர்கள் விண்வெளியில் தங்கும்போது ஒரு நாளுக்கு 16 சூரிய உதயமும் 16 சூரிய மறைவும் காணமுடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை மற்ற நிறுவனங்கள் விண்வெளிக்கு அழைத்துச் செல்ல வாங்கும் பணத்தைவிட இது மிகக் குறைவு எனவும் அவர்கள் கூறியுள்ளனர்.
இதேவேளை அந்த விண்வெளி ஹோட்டலிற்கு செல்வதற்கான முன்பதிவு எப்போது தொடங்கும் என்ற அறிவிப்புகள் எதுவும் இன்னும் வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த ஹோட்டலில் தங்குவதற்கு இந்திய ரூபாயில் சுமார் 61 கோடி எனவும் கூறப்படுகின்றது.

ஹோட்டல் கட்டுமானப் பணிகள் மிக விரைவில் தொடங்கவுள்ளதாகவும், 2021-ம் ஆண்டு முழு கட்டமைப்புப் பணிகளும் முடிந்துவிடும் என்றும் அதன் பின் பயணிகள் தங்க அனுமதிக்கப்படுவார்கள் எனவும் கூறப்பட்டுள்ளது.
மேலும் இது குறித்து பேசிய அந்நிறுவனத்தின் சி.இ.ஓ ஃபரான்க் பன்கெர் (Frank Bunger) `விண்வெளியிலிருந்து பூமியைப் பார்க்கப் பலருக்கும் கனவு உண்டு இதை நிஜமாக்கவே இந்த முயற்சி என்றும் கூறியுள்ளார்.
மனிதர்கள் தங்கள் வாழ்வில் ஒரு முறையாவது இந்த வாய்ப்பை அனுபவிக்க வேண்டும் என தாங்கள் நினைத்ததால், விண்வெளியில் அரோரா என்ற ஸ்பேஸ் ஸ்டேஷன் ராக்கெட் வடிவில் இருக்கும் இந்த ஹோட்டல் கட்டப்பட உள்ளதாக குறிப்பிட்டுள்ளார்,
அதோடு பூமியிலிருந்து 320 கிலோ மீட்டர் தூரத்தில் இந்த ஸ்பேஸ் ஸ்டேஷன் கட்டப்பட உள்ளது.
இந்த விண்வெளி ஹோட்டலில் தங்க ஒரு பயணத்தின்போது 6 பயணிகள் உள்பட தங்கள் குழுவை சேர்ந்த இரண்டு பேர் அனுமதிக்கப்படுவார்கள் என்றும், மனிதர்களை அழைத்துச் செல்லும் முன் அவர்களுக்குத் தக்க பயிற்சி அளிக்கப்பட்ட பிறகே அனுமதிக்கப்படுவார்கள் என்றும் அவர் கூறியுள்ளார்.
அங்கே புவியில் இருப்பது போன்று சாதாரணமாக இருக்கலாம் என்றும் . இதற்காக அங்கு செயற்கை புவியீர்ப்பு விசை உருவாக்கப்பட உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
12 நாள்கள் வரை பயணிகள் அங்கே தங்க அனுமதிக்கப்படுவார்கள். அவர்கள் விண்வெளியில் தங்கும்போது ஒரு நாளுக்கு 16 சூரிய உதயமும் 16 சூரிய மறைவும் காணமுடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை மற்ற நிறுவனங்கள் விண்வெளிக்கு அழைத்துச் செல்ல வாங்கும் பணத்தைவிட இது மிகக் குறைவு எனவும் அவர்கள் கூறியுள்ளனர்.
இதேவேளை அந்த விண்வெளி ஹோட்டலிற்கு செல்வதற்கான முன்பதிவு எப்போது தொடங்கும் என்ற அறிவிப்புகள் எதுவும் இன்னும் வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.