பொருளாதார நெருக்கடி காரணமாக மகள்களை கட்டி ஏர் உழுத தந்தை

போபால்: மத்திய பிரதேச மாநிலத்தின் சிஹோர் பகுதியில் பொருளாதாரா நெருக்கடி காரணமாக மகள்களை கட்டி ஏர் உழுத விவசாயிக்கு அம்மாநில அரசு விவசாய உபகரணங்களை வழங்கியுள்ளது.






குடும்பத்தில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியால் சிஹோர் பகுதியை சேர்ந்த விவசாயி ஒருவர் தனது மகள்கள் 2 பேரை மாடுகளுக்கு பதிலாக ஏரில் பூட்டி உழும் காட்சி இணையதளத்தில் வெளியானது.






இதனை அரசின் கவனத்திற்கு அதிகாரிகள் எடுத்துச் சென்றனர். இதையடுத்து அந்த விவசாயிக்கு அம்மாநில அரசு விவசாய உபகரங்களை வழங்கியுள்ளது.







ஆனால் நிலத்தை உழுவதற்காக மகள்களை பயன்படுத்தவில்லை என்றும் களையெடுப்பதற்கான இயந்திரத்தையே பயன்படுத்தியதாகவும் அந்த விவசாயி விளக்கமளித்துள்ளார்.



Previous Post Next Post