நொச்சியாகம பிரதேசத்தில் ஒன்பது வயதான சிறுமியை துஸ்பிரயோகம் செய்ய முயன்ற பதின்மூன்று வயது சிறுவன் தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது.
அண்மையில் நொச்சியாகம ஆரம்ப பள்ளியில் கல்வி கற்கும் குறித்த சிறுமி பாடசாலை முடிந்தவுடன் தனது தாயுடன் பாடசாலையில் இருந்துள்ளார்.

சிறுமியின் தாய் பாடசாலை முற்றத்தை சுத்தம் செய்ய அங்கு நின்றுள்ளார். அந்த நேரத்தில் பெரிய பாடசாலையில் கல்வி பயிலும் தங்களது வீட்டுக்கு அருகில் உள்ள சிறுவன் சைக்கிளில் வீட்டுக்குச் செல்லும்போது, குறித்த தாய், நான் துப்பரவு செய்து விட்டு வருகிறேன் தங்கையை வீட்டில் விடுமாறு கோரியுள்ளார்.
குறித்த சிறுவனும் சிறுமியை சைக்கிளில் ஏற்றிக் கொண்டு சிறுமியின் வீட்டுக்கருகில் உள்ள நீர்நிலைக்கு கொண்டு சென்று துஸ்பிரயோகம் மேற்கொள்ள முயற்சித்துள்ளார்.
இந்தநிலையில், சிறுமி மிகவும் உரத்த குரலில் கூச்சலிட்டதைக் கேட்ட பெண்ணொருவர், அங்கு சென்று குறித்த சிறுமியை அழைத்துக் கொண்டு பொலிஸ் நிலையத்திற்குச் சென்றுள்ளார்.
குறித்த பெண் அவர்களின் அருகில் வசிப்பர் என தெரிவிக்கப்படுகிறது. அதன்பின்னர், சிறுமியின் தாய் பொலிஸ் நிலையத்திற்கு வரவழைக்கப்பட்டு விசாரணைகள் நடத்தப்பட்டன.
குறித்த மாணவன் கைது செய்யப்பட்டார். மாணவர் நீதிமன்றத்திற்கு முன் ஆஜர்படுத்தப்பட்டபோது, நன்னடத்தை இல்லத்திற்கு அனுப்பப்பட்டார்.
சிறுமி மருத்துவ பரிசோதனைக்காக அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பொலிஸின் அறிக்கையின் படி, சிறுமி எந்த விதமான துஷ்பிரயோகத்திற்கும் உட்படுத்தப்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
சிறுவனின் தந்தை இறந்து விட்டதாகவும், அவரது தாய் வேறொரு நபரை திருமணம் செய்து வேறு இடத்தில் வாழ்வதாக தெரிவிக்கப்படுகிறது. குறித்த சிறுவன் பாட்டியுடன் வாழ்ந்து வந்துள்ளார்.
அண்மையில் நொச்சியாகம ஆரம்ப பள்ளியில் கல்வி கற்கும் குறித்த சிறுமி பாடசாலை முடிந்தவுடன் தனது தாயுடன் பாடசாலையில் இருந்துள்ளார்.

சிறுமியின் தாய் பாடசாலை முற்றத்தை சுத்தம் செய்ய அங்கு நின்றுள்ளார். அந்த நேரத்தில் பெரிய பாடசாலையில் கல்வி பயிலும் தங்களது வீட்டுக்கு அருகில் உள்ள சிறுவன் சைக்கிளில் வீட்டுக்குச் செல்லும்போது, குறித்த தாய், நான் துப்பரவு செய்து விட்டு வருகிறேன் தங்கையை வீட்டில் விடுமாறு கோரியுள்ளார்.
குறித்த சிறுவனும் சிறுமியை சைக்கிளில் ஏற்றிக் கொண்டு சிறுமியின் வீட்டுக்கருகில் உள்ள நீர்நிலைக்கு கொண்டு சென்று துஸ்பிரயோகம் மேற்கொள்ள முயற்சித்துள்ளார்.
இந்தநிலையில், சிறுமி மிகவும் உரத்த குரலில் கூச்சலிட்டதைக் கேட்ட பெண்ணொருவர், அங்கு சென்று குறித்த சிறுமியை அழைத்துக் கொண்டு பொலிஸ் நிலையத்திற்குச் சென்றுள்ளார்.
குறித்த பெண் அவர்களின் அருகில் வசிப்பர் என தெரிவிக்கப்படுகிறது. அதன்பின்னர், சிறுமியின் தாய் பொலிஸ் நிலையத்திற்கு வரவழைக்கப்பட்டு விசாரணைகள் நடத்தப்பட்டன.
குறித்த மாணவன் கைது செய்யப்பட்டார். மாணவர் நீதிமன்றத்திற்கு முன் ஆஜர்படுத்தப்பட்டபோது, நன்னடத்தை இல்லத்திற்கு அனுப்பப்பட்டார்.
சிறுமி மருத்துவ பரிசோதனைக்காக அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பொலிஸின் அறிக்கையின் படி, சிறுமி எந்த விதமான துஷ்பிரயோகத்திற்கும் உட்படுத்தப்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
சிறுவனின் தந்தை இறந்து விட்டதாகவும், அவரது தாய் வேறொரு நபரை திருமணம் செய்து வேறு இடத்தில் வாழ்வதாக தெரிவிக்கப்படுகிறது. குறித்த சிறுவன் பாட்டியுடன் வாழ்ந்து வந்துள்ளார்.