கள்ளக்காதலனை காப்பாற்ற கணவனின் அந்தரங்க உறுப்பை கடித்து இரண்டாக்கிய மனைவி…!

இந்தியா, தமிழ் நாட்டின் வேலூர் மாவட்டத்தில் கள்ளக்காதலனை விடுவிக்க கணவனின் மர்ம உறுப்பை, மனைவி கடித்து துண்டாக்கிய சம்பவம் அந்தப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



கே.வி.குப்பத்தை அடுத்த காங்குப்பம் ஊராட்சி துரைமூலை கிராமத்தை சேர்ந்தவர் செந்தாமரை (வயது 50). இவரது மனைவி ஜெயந்தி (40). துரைமூலை கிராமத்தில் ஆடி மாதத்தையொட்டி திருவிழா நடைபெற்று வருகிறது. நேற்று முன்தினம் இரவு (31.07.2018) கிராமத்தில் தெருக்கூத்து நடைபெற்றுள்ளது.





தெருக்கூத்து பார்த்துவிட்டு செந்தாமரை வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது வீட்டில் தனது மனைவி ஜெயந்தியுடன், அதே பகுதியை சேர்ந்த கள்ளக்காதலன் தட்சிணாமூர்த்தி (30) என்பவருடன் நெருக்கமாக இருந்துள்ளனர்.

இதனால் செந்தாமரை, ஜெயந்தி, தட்சிணாமூர்த்தி ஆகிய 3 பேருக்கும் இடையே வாக்குவாதத்துடன் அடிதடி ஏற்பட்டுள்ளது.

இதில் கணவர் செந்தாமரையிடம் இருந்து, கள்ளக்காதலன் தட்சிணாமூர்த்தியை விடுவிக்க ஜெயந்தி தனது கணவரின் மர்ம உறுப்பை கடித்துள்ளார்.





இதில் மர்ம உறுப்பு பாதி துண்டானது. இதனால் அவர் அலறியுள்ளார். அதற்குள் தட்சிணாமூர்த்தி அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். செந்தாமரையின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் அங்கு திரண்டனர்.

அவர்கள் உடனடியாக செந்தாமரையை சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக சென்னை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். நள்ளிரவில் அவர்கள் சென்ற 108 அம்புலன்ஸ் வாகனம் சென்னை பூந்தமல்லி அருகே விபத்தில் சிக்கியது.

இதில் காயம் அடைந்த செந்தாமரை மற்றும் உறவினர் ஜானகி உள்ளிட்டோர் சிகிச்சைக்காக சென்னையில் உள்ள அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.





இந்த சம்பவம் தொடர்பாக கே.வி.குப்பம் பொலிஸ் உயரதிகாரி கவிதா வழக்குப்பதிவு செய்து ஜெயந்தியிடம் விசாரணை நடத்தி வருகிறார். மேலும் தப்பி ஓடிய தட்சிணாமூர்த்தியை தேடி வருகின்றனர்.
Previous Post Next Post