கிளிநொச்சியில் சிவில் இராணுவத்தால் ஏற்பட்ட பதற்றம்!


கிளிநொச்சி - சாந்தபுரம் பகுதியில் மக்களின் குடியிருப்புக்குள் நுழைந்த சிவில் பாதுகாப்பு உத்தியோகத்தர்களால் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

அங்குள்ள மக்களின் குடிசைகளை அகற்றியதால் அங்கு பதற்றமான நிலை ஏற்பட்டுள்ளது.

குறித்த பகுதி அண்மையில் இராணுவத்தினரிடம் இருந்து விடுவிக்கப்பட்டது. இந்த நிலையில், காணியின் உரிமையாளர்கள் அங்கு மீள்குடியேறியிருந்தனர்.

அதில் தற்காலிக கொட்டில்களை அமைத்து வாழ்த்தும் வந்துள்ளனர்.

இந்த நிலையில் இன்று எவ்வித முன்னறிவிப்பும் இன்றி அவர்களின் குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்த சிவில் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் அவர்களின் குடிசைகளை பலவந்தமாக அகற்றியுள்ளனர்.

இதனால் அப்பகுதியில் உள்ள மக்கள் அவர்களுடன் முரண்பாட்டில் ஈடுபட்ட நிலையில் அங்கு பொலிஸார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

சாந்தபுரம் பகுதியில் பொது மக்களுக்கு சொந்தமான 200 ஏக்கர் காணிகள் இன்னும் இராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ள நிலையில் அண்மையில் விடுவிக்கப்பட்ட குறித்த பகுதியை மீண்டும் இவர்கள் கைப்பற்றும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதால் அங்கு பெரும் குழப்பம் ஏற்பட்டுள்ளது.






Previous Post Next Post