உத்திரபிரதேச மாநிலத்தில் மது போதையில் விஷ பாம்பினை கடித்து தின்ற நபர் அடுத்த சில மணிநேரங்களில் பரிதாபமாக பலியாகியுள்ள சோக சம்பவம் நிகழ்ந்துள்ளது.
உத்திரபிரதேச மாநிலம் அம்ரோஹா மாவட்டத்தில் உள்ள குட்டி கிராமத்தை சேர்ந்தவர் மஹிபால் சிங் (40).
நேற்று அளவுக்கு அதிகமான மது போதையில் இருந்த மஹிபால், சாலை ஓரத்தில் சென்றுகொண்டிருந்த குட்டி பாம்பு ஒன்றினை பிடித்து சாப்பிட ஆரம்பித்தார்.

இதனை பார்த்த அங்கிருந்த இளைஞர்கள் தங்களுடைய செல்போனில் வீடியோவாக படமெடுக்க ஆரம்பித்தனர். வீடியோ எடுத்துக்கொண்டிருக்கும் போதே மஹிபால் திடீரென வாந்தி எடுக்க ஆரம்பித்தார். ஆனால் அதில் அவர் உட்கொண்ட பாம்பு வெளிவரவில்லை.
இதனையடுத்து உடனடியாக அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு மருத்துவர்கள் பரிசோதனை மேற்கொள்ளும் போதே சிகிச்சை பலனின்றி மஹிபால் உயிரிழந்தார்.
பின்னர் இந்த சம்பவம் அறிந்து வந்த பொலிஸார் மஹிபால் குறித்து மேற்கொண்ட விசாரணையில், அவர் தன்னுடைய மனைவி, மூன்று மகள்கள் மற்றும் மகனுடன் வசித்து வந்தது தெரியவந்துள்ளது.
உத்திரபிரதேச மாநிலம் அம்ரோஹா மாவட்டத்தில் உள்ள குட்டி கிராமத்தை சேர்ந்தவர் மஹிபால் சிங் (40).
நேற்று அளவுக்கு அதிகமான மது போதையில் இருந்த மஹிபால், சாலை ஓரத்தில் சென்றுகொண்டிருந்த குட்டி பாம்பு ஒன்றினை பிடித்து சாப்பிட ஆரம்பித்தார்.

இதனை பார்த்த அங்கிருந்த இளைஞர்கள் தங்களுடைய செல்போனில் வீடியோவாக படமெடுக்க ஆரம்பித்தனர். வீடியோ எடுத்துக்கொண்டிருக்கும் போதே மஹிபால் திடீரென வாந்தி எடுக்க ஆரம்பித்தார். ஆனால் அதில் அவர் உட்கொண்ட பாம்பு வெளிவரவில்லை.
இதனையடுத்து உடனடியாக அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு மருத்துவர்கள் பரிசோதனை மேற்கொள்ளும் போதே சிகிச்சை பலனின்றி மஹிபால் உயிரிழந்தார்.
பின்னர் இந்த சம்பவம் அறிந்து வந்த பொலிஸார் மஹிபால் குறித்து மேற்கொண்ட விசாரணையில், அவர் தன்னுடைய மனைவி, மூன்று மகள்கள் மற்றும் மகனுடன் வசித்து வந்தது தெரியவந்துள்ளது.