என் மனைவி தாங்க இதுக்கு எல்லாம் காரணம்! பொலிசாரால் கைது செய்யப்பட்ட கணவன் வாக்குமூலம்

இந்தியாவில் மனைவியின் தொந்தரவு தாங்க முடியாமல் கணவர் செயின் பறிப்பு சம்பவத்தில் ஈடுபட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பெங்களூரு அருகே கெங்னேரி கொம்பலக்கோடு பகுதியைச் சேர்ந்தவர், அக்யூத்குமார். இவர் தான் ஒரு ரியல் எஸ்டேட் அதிபர் என்று கூறி, மகாதேவி என்ற பெண்ணை திருமணம் செய்துள்ளார்.

ஆனால் உண்மையிலே ஆக்யூத்குமார் திருட்டு தொழிலில் ஈடுபட்டு வந்துள்ளார். இந்த விடயம் திருமணத்திற்கு பின் மகாதேவிக்கு தெரியவர, அவர் இதை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.

அதற்கு பதிலாக கணவரிடம் தினமும் 3 செயின் பறித்துக்கொண்டுதான் வீட்டுக்குள் வரவேண்டும், அப்படி வரவில்லை என்றால் உன்னை வீட்டிற்குள் அனுமதிக்கமாட்டேன் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இதனால் மனைவியின் டார்ச்சர் தாங்கமுடியாமல் அக்யூத்குமார் செயின் பறிப்பில் ஈடுபட்டு வந்துள்ளார். திருமணம் முடிந்து 7 மாதங்களில் 106 செயின் பறிப்பில் ஈடுபட்டுள்ளார்.

Previous Post Next Post