பாடசாலைகளுக்கு இடையிலான தேசிய ரீதியிலான எறிபந்தாட்டத்தில் தெல்லிப்பழை யூனியன் கல்லூரி அணியை எதிர்த்து கொழும்பு ஸ்ரீமாவோ பாலிக மகா வித்தியாலயம் இன்று மோதவுள்ளது.
இரத்தினபுரி எமிலிப்பிட்டிய அரச தலைவர் கல்லூரி மைதானத்தில் இந்தத் தொடர் நடைபெற்று வருகின்றது. நேற்று நடைபெற்ற 20 வயதுப்பிரிவு பெண்களிற்கான அரையிறுதியாட்டமொன்றில் தெல்லிப்பழை யூனியன் கல்லூரி அணியை எதிர்த்து கேகாலை சென். ஜோசப் கல்லூரி அணி மோதியது.
முதலாவது செற்றில் ஆதிக்கம் செலுத்திய தெல்லிப்பழை யூனியன் கல்லூரி அணி 25:16 என்ற புள்ளிகளின் அடிப்படையில் அந்த செற்றைக் கைப்பற்றியது. இரண்டாவது செற்றும் 26:24 என்ற புள்ளிகளின் அடிப்படையில் யூனியனின் வசமானதை அடுத்து 2:0 என்ற நேர்செற் கணக்கில் வெற்றிபெற்று இறுதியாட்டத்துக்குத் தகுதி பெற்றது தெல்லிப்பழை யூனியன்.
பிறிதொரு அரையிறுதி ஆட்டத்தில் கொழும்பு ஸ்ரீமாவோ பாலிக மகா வித்தியாலய அணியை எதிர்த்து வெல்லவாய குமாரதாஸ மத்திய கல்லூரி அணி மோதியது. இதில் கொழும்பு ஸ்ரீமாவோ பாலிக மகா வித்தியாலய அணி 3:1 என்ற செற் கணக்கில் வெற்றிபெற்று இறுதியாட்டத்திற்குத் தகுதி பெற்றது.
இரத்தினபுரி எமிலிப்பிட்டிய அரச தலைவர் கல்லூரி மைதானத்தில் இந்தத் தொடர் நடைபெற்று வருகின்றது. நேற்று நடைபெற்ற 20 வயதுப்பிரிவு பெண்களிற்கான அரையிறுதியாட்டமொன்றில் தெல்லிப்பழை யூனியன் கல்லூரி அணியை எதிர்த்து கேகாலை சென். ஜோசப் கல்லூரி அணி மோதியது.
முதலாவது செற்றில் ஆதிக்கம் செலுத்திய தெல்லிப்பழை யூனியன் கல்லூரி அணி 25:16 என்ற புள்ளிகளின் அடிப்படையில் அந்த செற்றைக் கைப்பற்றியது. இரண்டாவது செற்றும் 26:24 என்ற புள்ளிகளின் அடிப்படையில் யூனியனின் வசமானதை அடுத்து 2:0 என்ற நேர்செற் கணக்கில் வெற்றிபெற்று இறுதியாட்டத்துக்குத் தகுதி பெற்றது தெல்லிப்பழை யூனியன்.
பிறிதொரு அரையிறுதி ஆட்டத்தில் கொழும்பு ஸ்ரீமாவோ பாலிக மகா வித்தியாலய அணியை எதிர்த்து வெல்லவாய குமாரதாஸ மத்திய கல்லூரி அணி மோதியது. இதில் கொழும்பு ஸ்ரீமாவோ பாலிக மகா வித்தியாலய அணி 3:1 என்ற செற் கணக்கில் வெற்றிபெற்று இறுதியாட்டத்திற்குத் தகுதி பெற்றது.