கொள்ளுப்பிட்டியில் சுற்றிவளைத்து பிடிக்கப்பட்ட ஆபாச அழகிகள்


கொழும்பு, கொள்ளுப்பிட்டியில் செயற்பட்ட பிரபல மசாஜ் நிலையம் ஒன்று பொலிஸாரினால் சுற்றி வளைக்கப்பட்டுள்ளது.

இதன்போது அங்கிருந்த 14 பெண்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.



கைது செய்யப்பட்ட பெண்கள் தாய்லாந்து நாட்டை சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

குடிவரவு குடியகல்வு திணைக்களத்தினால் இந்த திடீர் சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.



சுற்றுலா விசாவில் இலங்கை வந்த இந்த பெண்கள் சட்டவிரோத தொழில்களில் ஈடுபட்டதன் காரணமாக கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த பெண்கள் மாதம் இரண்டு லட்சம் ரூபா சம்பளம் பெறுவதாக தெரியவந்துள்ளது.



கொள்ளுப்பிட்டி, சமுத்ரா மாவத்தையில் இந்த பிரபல மசாஜ் நிலையம் நடத்தி செல்லப்படுகின்றது.

சுற்றிவளைப்பை மேற்கொண்ட சந்தர்ப்பத்தில் அதன் உரிமையாளர் அங்கிருக்கவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
Previous Post Next Post