தனது இரண்டு பிள்ளைகளுக்கும் விசம் கொடுத்து கொலை செய்த தாய், காதலனுடன் தப்பியோடிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்தச் சம்பவம் சென்னை குன்றத்தூரில் நடந்துள்ளது.
சென்னையை அடுத்துள்ள குன்றத்தூர் அருகே மூன்றாம் கட்டளை, அகதாவரன் கோவில் தெருவில் வசித்து வருபவர் விஜய்.
இவர் தனியார் வங்கியில் பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி அபிராமி. இவர்களுக்கு 2 குழந்தைகள். முதல் குழந்தை அஜய்யும், 2-வது குழந்தை கார்னிகா-வும் படித்து வருகின்றனர்.
விஜய் நேற்றிரவு வீட்டிற்கு வராமல் அலுவலகத்திலேயே தங்கிவிட்டார். இன்று அதிகாலை வீட்டிற்கு வந்த போது வீட்டின் கதவு வெளிப்புறமாக சாத்தப்பட்டு இருந்தது.

இந்தச் சம்பவம் சென்னை குன்றத்தூரில் நடந்துள்ளது.
சென்னையை அடுத்துள்ள குன்றத்தூர் அருகே மூன்றாம் கட்டளை, அகதாவரன் கோவில் தெருவில் வசித்து வருபவர் விஜய்.
இவர் தனியார் வங்கியில் பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி அபிராமி. இவர்களுக்கு 2 குழந்தைகள். முதல் குழந்தை அஜய்யும், 2-வது குழந்தை கார்னிகா-வும் படித்து வருகின்றனர்.
விஜய் நேற்றிரவு வீட்டிற்கு வராமல் அலுவலகத்திலேயே தங்கிவிட்டார். இன்று அதிகாலை வீட்டிற்கு வந்த போது வீட்டின் கதவு வெளிப்புறமாக சாத்தப்பட்டு இருந்தது.
கதவைத் திறந்து பார்த்த போது இரண்டு பிள்ளைகளும் வாயில் நுரை
தள்ளியபடி கட்டிலில் இறந்து கிடந்தனர்.
குழந்தைகள் இறந்து கிடப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்து விஜய் அலறினார். அலறல் சத்தம் கேட்டு அக்கம், பக்கத்தில் இருந்தவர்கள் ஒடிவந்து பார்த்துவிட்டு குன்றத்தூர் பொலிஸாருக்குத் தகவல் தெரிவித்தனர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பொலிஸார், கொலை செய்யப்பட்ட 2 குழந்தைகளையும் மீட்டனர்.
கணவன் – மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. மேலும் அபிராமிக்கு வேறு ஒருவருடன் தொடர்பு இருந்ததாகவும் தெரியவந்தது. அதன் காரணமாகத் தான் நேற்று இரவு குழந்தைகளுக்கு பாலில் விசம் கலந்து கொடுத்து விட்டு தலைமறைவாகியுள்ளார் என்று தெரியவருகிறது.
தள்ளியபடி கட்டிலில் இறந்து கிடந்தனர்.
குழந்தைகள் இறந்து கிடப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்து விஜய் அலறினார். அலறல் சத்தம் கேட்டு அக்கம், பக்கத்தில் இருந்தவர்கள் ஒடிவந்து பார்த்துவிட்டு குன்றத்தூர் பொலிஸாருக்குத் தகவல் தெரிவித்தனர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பொலிஸார், கொலை செய்யப்பட்ட 2 குழந்தைகளையும் மீட்டனர்.
கணவன் – மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. மேலும் அபிராமிக்கு வேறு ஒருவருடன் தொடர்பு இருந்ததாகவும் தெரியவந்தது. அதன் காரணமாகத் தான் நேற்று இரவு குழந்தைகளுக்கு பாலில் விசம் கலந்து கொடுத்து விட்டு தலைமறைவாகியுள்ளார் என்று தெரியவருகிறது.