கரூரில் உதவி கேட்டு தஞ்சமடைந்த காதல் ஜோடியை பொலிஸார் பிரிக்க முயன்றதால், திடீரென காதலன் காவல்நிலையம் முன்பு கழுத்தை அறுத்துக்கொண்டு தற்கொலைக்கு முயன்றுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கரூர் அண்ணாநகரைச் சேர்ந்த சுப்பிரமணியன் என்பவரது மகன் கோபிநாத் (24). இன்ஜினியரிங் படிப்பை பாதியில் நிறுத்திய கோபிநாத், சேலத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்.
இவரும் கரூர் பாரதி நகரை சேர்ந்த 19 வயதான கோபிகாவும் ஒருவரை ஒருவர் காதலித்து வந்துள்ளனர். கோபிகா ஈரோட்டில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வருகிறார்.

இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் கோபிகா வீட்டில் பலத்த எதிர்ப்பு கிளம்பியிருக்கிறது. இதனால் இருவரும் கடந்த 9-ம் தேதியன்று கோவிலில் வைத்து திருமணம் செய்து கொண்டனர்.
ஆனால் தொடர்ந்து கோபிகா வீட்டில் இருந்து எதிர்ப்பு வந்ததால், பாதுகாப்பு கோரி இருவரும் கடந்த 11-ம் தேதியன்று கரூர் காவல் நிலையத்தில் தஞ்சமடைந்தனர்.
அங்கு காவல்நிலைய ஆய்வாளர் பிருத்திவிராஜ், அமைச்சரின் உறவு பெண்ணான கோபிகாவை மறந்துவிட்டு ஓடிவிடு. இல்லையென்றால், உன் மீது பொய் வழக்கு போட்டு உள்ளே தள்ளிவிடுவேன் என மிரட்டியுள்ளார்.

இதனால் என்ன செய்வதென தெரியாமல் திகைத்த கோபிநாத், உடனடியாக தான் சட்டை பையில் வைத்திருந்த பிளேடால், காதலியின் கண்முன்னே கழுத்தை அறுத்துக்கொண்டு தற்கொலைக்கு முயன்றார்.
இதனை பார்த்த உறவினர்கள் உடனடியாக அவரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு கோபிநாத்திற்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதற்கிடையில் சம்பவம் அறிந்த அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தரப்பினர், இந்த சம்பவத்திற்கும், எங்களுக்கும் எந்தவிதமான சம்மந்தமும் கிடையாது என கூறியுள்ளனர்.
கரூர் அண்ணாநகரைச் சேர்ந்த சுப்பிரமணியன் என்பவரது மகன் கோபிநாத் (24). இன்ஜினியரிங் படிப்பை பாதியில் நிறுத்திய கோபிநாத், சேலத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்.
இவரும் கரூர் பாரதி நகரை சேர்ந்த 19 வயதான கோபிகாவும் ஒருவரை ஒருவர் காதலித்து வந்துள்ளனர். கோபிகா ஈரோட்டில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வருகிறார்.

இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் கோபிகா வீட்டில் பலத்த எதிர்ப்பு கிளம்பியிருக்கிறது. இதனால் இருவரும் கடந்த 9-ம் தேதியன்று கோவிலில் வைத்து திருமணம் செய்து கொண்டனர்.
ஆனால் தொடர்ந்து கோபிகா வீட்டில் இருந்து எதிர்ப்பு வந்ததால், பாதுகாப்பு கோரி இருவரும் கடந்த 11-ம் தேதியன்று கரூர் காவல் நிலையத்தில் தஞ்சமடைந்தனர்.
அங்கு காவல்நிலைய ஆய்வாளர் பிருத்திவிராஜ், அமைச்சரின் உறவு பெண்ணான கோபிகாவை மறந்துவிட்டு ஓடிவிடு. இல்லையென்றால், உன் மீது பொய் வழக்கு போட்டு உள்ளே தள்ளிவிடுவேன் என மிரட்டியுள்ளார்.

இதனால் என்ன செய்வதென தெரியாமல் திகைத்த கோபிநாத், உடனடியாக தான் சட்டை பையில் வைத்திருந்த பிளேடால், காதலியின் கண்முன்னே கழுத்தை அறுத்துக்கொண்டு தற்கொலைக்கு முயன்றார்.
இதனை பார்த்த உறவினர்கள் உடனடியாக அவரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு கோபிநாத்திற்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதற்கிடையில் சம்பவம் அறிந்த அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தரப்பினர், இந்த சம்பவத்திற்கும், எங்களுக்கும் எந்தவிதமான சம்மந்தமும் கிடையாது என கூறியுள்ளனர்.