விருதுநகர் மாவட்டத்தில் சமூக வலைதளத்தை பார்த்து மனைவிக்கு பிரசவம் பார்த்ததோடு, குழந்தை, மனைவியை சிகிச்சைக்கு அனுப்ப மறுத்த கணவரால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
முகமது தாஜூதீன் (29). இவரது மனைவி அன்சுல் பாத்திமா(24). அன்சுல் பாத்திமா முதன்முறையாக கர்ப்பம் அடைந்ததை தொடர்ந்து, மருத்துவமனையில் அனுமதிக்காமல் வீட்டில் வைத்து பிரசவம் பார்க்க கணவர் முடிவு செய்தார்.

இரவு 11.30 மணியளவில் அவருக்கு பிரசவ வலி ஏற்பட்டது. முகமது தாஜூதீன், யுடியூப்பில் வெளியான ஒரு வீடியோவின் அடிப்படையில் பிரசவம் பார்த்துள்ளார்.
நேற்று அதிகாலை அன்சுல் பாத்திமாவுக்கு 2.8 கிலோ எடையுள்ள பெண் குழந்தை பிறந்தது. குழந்தைக்கு தொப்புள் கொடி அறுக்காத நிலையில், தாய்க்கு ரத்தப்போக்கு அதிகரித்தது.
தகவலறிந்த ஆரம்ப சுகாதார நிலைய கிராம சுகாதார செவிலியர் நேற்று காலை வீட்டிற்கு சென்று, தொப்புள் கொடியை பிரிக்க வேண்டும் என கூறியுள்ளார்.
அதற்கு முகமது தாஜூதீன் சம்மதிக்கவில்லை. 3 நாட்களுக்கு தொப்புள் கொடியை அகற்றக்கூடாது என தெரிவித்துள்ளார். இதனையடுத்து, ஆரம்ப சுகாதார நிலைய, மருத்துவர் இந்திரா ஜெயராமன் சென்று தொப்புள் கொடியை அகற்றக் கோரியுள்ளார்.
பின்னர் 108 ஆம்புலன்ஸ் மூலம் திருவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனைக்கு குழந்தையும், தாயையும் அழைத்து சென்றனர்.
முகமது தாஜூதீன் (29). இவரது மனைவி அன்சுல் பாத்திமா(24). அன்சுல் பாத்திமா முதன்முறையாக கர்ப்பம் அடைந்ததை தொடர்ந்து, மருத்துவமனையில் அனுமதிக்காமல் வீட்டில் வைத்து பிரசவம் பார்க்க கணவர் முடிவு செய்தார்.

இரவு 11.30 மணியளவில் அவருக்கு பிரசவ வலி ஏற்பட்டது. முகமது தாஜூதீன், யுடியூப்பில் வெளியான ஒரு வீடியோவின் அடிப்படையில் பிரசவம் பார்த்துள்ளார்.
நேற்று அதிகாலை அன்சுல் பாத்திமாவுக்கு 2.8 கிலோ எடையுள்ள பெண் குழந்தை பிறந்தது. குழந்தைக்கு தொப்புள் கொடி அறுக்காத நிலையில், தாய்க்கு ரத்தப்போக்கு அதிகரித்தது.
தகவலறிந்த ஆரம்ப சுகாதார நிலைய கிராம சுகாதார செவிலியர் நேற்று காலை வீட்டிற்கு சென்று, தொப்புள் கொடியை பிரிக்க வேண்டும் என கூறியுள்ளார்.
அதற்கு முகமது தாஜூதீன் சம்மதிக்கவில்லை. 3 நாட்களுக்கு தொப்புள் கொடியை அகற்றக்கூடாது என தெரிவித்துள்ளார். இதனையடுத்து, ஆரம்ப சுகாதார நிலைய, மருத்துவர் இந்திரா ஜெயராமன் சென்று தொப்புள் கொடியை அகற்றக் கோரியுள்ளார்.
பின்னர் 108 ஆம்புலன்ஸ் மூலம் திருவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனைக்கு குழந்தையும், தாயையும் அழைத்து சென்றனர்.