பெண்ணொருவரின் மோசமான செயற்பாடு : சிசிடிவியில் பதிவாகிய காட்சிகள்!!

காலி – இமதுவ பகுதியில் அமைந்துள்ள பிரபல வர்த்தக நிலையத்தில் வைத்து நேற்று முன்தினம் பெண்ணொருவர் வசமாக சிக்கிக் கொண்டுள்ளார்.

குறித்த பெண் அங்கு திருட முயற்சித்த போதே அங்கிருந்த ஊழியர்கள் அவரை மடக்கி பிடித்துள்ளனர். இதற்கு முன்னரும் குறித்த பெண் அந்த பிரபல வர்த்தக நிலையத்தில் பொருட்களை திருடியுள்ளார்.

இந்த மோசமான செயற்பாடு வர்த்தக நிலையத்தில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கமராவில் பதிவாகியிருந்ததாக ஊழியர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்த சம்பவத்தின் பின்னர் குறித்த பெண் தொடர்பில் அவர்கள் அவதானத்துடன் இருந்து வந்த நிலையிலேயே நேற்று முன்தினம் அவர் வசமாக சிக்கிக் கொண்டுள்ளார்.

இதனையடுத்து அவர் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள நிலையில், இது தொடர்பான விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.





Previous Post Next Post