வவுனியாவில் ஆவா குழுவினரால் இளைஞர்களுக்கு எச்சரிக்கை
வவுனியாவில் இன்று காலை முதல் பல இடங்களின் வீதியில் ஆவா குழுவினரின் துண்டுப்பிரசுரங்கள் வீதிகளில் வீசப்பட்ட நிலையில் பொலிசாரல் மீட்கப்பட்டுள்ளது.
இவ் விடயம் குறித்து மேலும் தெரியவருகையில்,
இன்று காலை வவுனியா குருமன்காடு, வைரவப்புளியங்குளம், புகையிரத நிலைய வீதி, கண்டி வீதிகள் போன்ற பகுதிகளில் வீதிகளில் வீசப்பட்ட நிலையில் ஆவா குழுவினரின் துண்டுப்பிரசுரங்கள் காணப்பட்டுள்ளது. அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது.
ஆவா குழுவினரால் பொதுமக்களுக்கு வவுனியாவில் வீதி ஓரங்களிலிருந்து பொதுமக்களுக்கும் இளம் பெண்களுக்கும் இடையூறுகள் ஏற்படுத்தும் இளைஞர்கள், ஜங்ஸ்டார், பைட்டர், கற்குழி போன்ற மைதானத்தில் எமது செயற்பாடுகளுக்குள் உள்வாங்கும் நோக்கத்துடன் விரிவுபடுத்தவதற்கு உள்ளோம்.
அவர்களைக்காட்டிக்கொடுக்கும் நோக்கில் செயற்படும் மக்களுக்கும் பொலிசாருக்கும் காட்டிக்கொடுக்கும் நோக்கில் செயற்படும் இளைஞர்களை எச்சரிக்கின்றோம். என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை இன்று காலை குருமன்காட்டு பகுதிகளில் வியாபார நிலையங்களுக்கு முன்பாக பொருத்தப்பட்டுள்ள சி.சி.ரி கமறாக்களை பொலிசார் சோதனையிட்டுள்ளதாக தெரியவருகின்றது.

வவுனியாவில் இன்று காலை முதல் பல இடங்களின் வீதியில் ஆவா குழுவினரின் துண்டுப்பிரசுரங்கள் வீதிகளில் வீசப்பட்ட நிலையில் பொலிசாரல் மீட்கப்பட்டுள்ளது.
இவ் விடயம் குறித்து மேலும் தெரியவருகையில்,
இன்று காலை வவுனியா குருமன்காடு, வைரவப்புளியங்குளம், புகையிரத நிலைய வீதி, கண்டி வீதிகள் போன்ற பகுதிகளில் வீதிகளில் வீசப்பட்ட நிலையில் ஆவா குழுவினரின் துண்டுப்பிரசுரங்கள் காணப்பட்டுள்ளது. அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது.
ஆவா குழுவினரால் பொதுமக்களுக்கு வவுனியாவில் வீதி ஓரங்களிலிருந்து பொதுமக்களுக்கும் இளம் பெண்களுக்கும் இடையூறுகள் ஏற்படுத்தும் இளைஞர்கள், ஜங்ஸ்டார், பைட்டர், கற்குழி போன்ற மைதானத்தில் எமது செயற்பாடுகளுக்குள் உள்வாங்கும் நோக்கத்துடன் விரிவுபடுத்தவதற்கு உள்ளோம்.
அவர்களைக்காட்டிக்கொடுக்கும் நோக்கில் செயற்படும் மக்களுக்கும் பொலிசாருக்கும் காட்டிக்கொடுக்கும் நோக்கில் செயற்படும் இளைஞர்களை எச்சரிக்கின்றோம். என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை இன்று காலை குருமன்காட்டு பகுதிகளில் வியாபார நிலையங்களுக்கு முன்பாக பொருத்தப்பட்டுள்ள சி.சி.ரி கமறாக்களை பொலிசார் சோதனையிட்டுள்ளதாக தெரியவருகின்றது.
