வாடிக்கையாளர்கள் பெயரில் கடன் பெற்று ரூ.3 கோடி மோசடி செய்த வங்கி பெண் மேலாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.
தமிழகத்தின் காரைக்குடியை சேர்ந்த சொக்கலிங்கம் என்பவர், கடந்த 1–ம் திகதி பொலிசில் புகார் ஒன்றை கொடுத்தார்.
அதில், நான் சித்த மருத்துவ கிளினிக் நடத்தி வருகிறேன். இதற்காக மூலிகை மரங்கள் மற்றும் செடிகளை வளர்த்து வந்தேன். அங்கு, திண்டுக்கல்லில் உள்ள ஒரு தேசியமயமாக்கப்பட்ட வங்கியின் பெண் மேலாளர் சொர்ணபிரியா என்பவர் சிகிச்சைக்காக வந்தார். அப்போது, மூலிகை தோட்டத்தை விரிவாக்கம் செய்ய கடன் வாங்கி தருவதாக கூறினார்.
இதை நம்பிய நான் வங்கிக்கு சென்று சொர்ணபிரியாவை சந்தித்து உரிய ஆவணங்களுடன் விண்ணப்பித்தேன். ரூ.50 லட்சம் கடன் தருவதாக கூறி, முதல்கட்டமாக ரூ.6 லட்சம் மட்டும் தந்தார். இதையடுத்து, பணம் வரவில்லை என்று கூறி காலம் தாழ்த்தி வந்தார்.
ஆனால், எனது வங்கி கணக்கை சரிபார்த்தபோது ரூ.50 லட்சம் கடன் பெற்றிருப்பது தெரியவந்தது. ரூ.6 லட்சத்தை மட்டும் தந்துவிட்டு மீதி பணத்தை சொர்ணபிரியா மோசடி செய்துவிட்டார்.
இதற்கு அவருடைய நண்பர்கள் ஹரிகரன், ராஜா மற்றும் வங்கி அதிகாரிகள் உள்ளிட்ட 4 பேர் உடந்தையாக இருந்துள்ளனர் என குறிப்பிட்டிருந்தார்.
இதுகுறித்து பொலிசார் விசாரித்த நிலையில், சொர்ணபிரியா இதேபோல, திண்டுக்கல்லை சேர்ந்த குமரேசன் உள்பட மேலும் 6 பேருக்கு உதவி செய்ய நான் இருக்கிறேன் என கூறி கடன் பெற்று மொத்தம் ரூ.3 கோடி வரை மோசடி செய்தது தெரியவந்தது.
இதையடுத்து பொலிசார் குற்றவாளிகளை தேடி வந்தனர்
இந்நிலையில், நேற்று முன்தினம் சொர்ணபிரியாவை பொலிசார் கைது செய்த நிலையில் அவரின் கூட்டாளிகளை தேடி வருகிறார்கள்.

தமிழகத்தின் காரைக்குடியை சேர்ந்த சொக்கலிங்கம் என்பவர், கடந்த 1–ம் திகதி பொலிசில் புகார் ஒன்றை கொடுத்தார்.
அதில், நான் சித்த மருத்துவ கிளினிக் நடத்தி வருகிறேன். இதற்காக மூலிகை மரங்கள் மற்றும் செடிகளை வளர்த்து வந்தேன். அங்கு, திண்டுக்கல்லில் உள்ள ஒரு தேசியமயமாக்கப்பட்ட வங்கியின் பெண் மேலாளர் சொர்ணபிரியா என்பவர் சிகிச்சைக்காக வந்தார். அப்போது, மூலிகை தோட்டத்தை விரிவாக்கம் செய்ய கடன் வாங்கி தருவதாக கூறினார்.
இதை நம்பிய நான் வங்கிக்கு சென்று சொர்ணபிரியாவை சந்தித்து உரிய ஆவணங்களுடன் விண்ணப்பித்தேன். ரூ.50 லட்சம் கடன் தருவதாக கூறி, முதல்கட்டமாக ரூ.6 லட்சம் மட்டும் தந்தார். இதையடுத்து, பணம் வரவில்லை என்று கூறி காலம் தாழ்த்தி வந்தார்.
ஆனால், எனது வங்கி கணக்கை சரிபார்த்தபோது ரூ.50 லட்சம் கடன் பெற்றிருப்பது தெரியவந்தது. ரூ.6 லட்சத்தை மட்டும் தந்துவிட்டு மீதி பணத்தை சொர்ணபிரியா மோசடி செய்துவிட்டார்.
இதற்கு அவருடைய நண்பர்கள் ஹரிகரன், ராஜா மற்றும் வங்கி அதிகாரிகள் உள்ளிட்ட 4 பேர் உடந்தையாக இருந்துள்ளனர் என குறிப்பிட்டிருந்தார்.
இதுகுறித்து பொலிசார் விசாரித்த நிலையில், சொர்ணபிரியா இதேபோல, திண்டுக்கல்லை சேர்ந்த குமரேசன் உள்பட மேலும் 6 பேருக்கு உதவி செய்ய நான் இருக்கிறேன் என கூறி கடன் பெற்று மொத்தம் ரூ.3 கோடி வரை மோசடி செய்தது தெரியவந்தது.
இதையடுத்து பொலிசார் குற்றவாளிகளை தேடி வந்தனர்
இந்நிலையில், நேற்று முன்தினம் சொர்ணபிரியாவை பொலிசார் கைது செய்த நிலையில் அவரின் கூட்டாளிகளை தேடி வருகிறார்கள்.
