பெற்ற மகளை விஷம் வைத்து கொலை செய்த பெற்றோர்: சோக சம்பவம்

விருதுநகர் மாவட்டத்தில் மூளைவளர்ச்சி குன்றிய மகளை பெற்றோரே விஷம் வைத்து கொலை செய்துள்ள கொடூர சம்பவம் நடந்துள்ளது.

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே வாழைக்குளத்தை சேர்ந்தவர் முனீஸ்வரன். இவருடைய மனைவி ரேவதி. முனீஸ்வரன் என்ஜினீயராக பணியாற்றி வருகிறார்.

இந்த தம்பதியினருக்கு சாதனா என்ற 9 வயது மகள் உள்ளார். பிறவியிலிருந்தே மூளை வளர்ச்சி குன்றிய சாதனாவை பல்வேறு மருத்துவமனைகளில் அனுமதித்து பரிசோதனை மேற்கொண்டனர். ஆனால் சாதனாவின் மூளை வளர்ச்சியில் எந்தவித முன்னேற்றமும் ஏற்படவில்லை.

இதனால் மனமுடைந்த பெற்றோர் சாதனாவை நாகபாளையத்தில் உள்ள கோவிலுக்கு அழைத்து சென்றனர். அங்கு சாமி தரிசனம் செய்துவிட்டு, மகள் சாப்பிட்ட உணவில் விஷத்தை கலந்து கொடுத்துள்ளனர்.
மேலும் சிறுமியின் கழுத்தை நெறித்து கொலை செய்யவும் முயற்சித்துள்ளனர்.

இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் உடனடியாக சிறுமியை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு தீவிர சிகிசிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த சிறுமி தற்போது சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்துள்ள பொலிஸார் முனீஸ்வரனை கைது செய்துள்ளனர்.

Previous Post Next Post