வவுனியாவில் பேரூந்தின் சில்லில் அகப்பட்டு இராணுவ வீரர் பலி : சாரதி கைது!! (படங்கள்)

வவுனியா ஓமந்தை விளக்குவைத்தகுளம் பகுதியில் இன்று (15.10.2018) காலை 9 மணியளவில் பேரூந்தின் சில்லில் அகப்பட்டு இராணுவ வீரர் ஒருவர்சம்பவ இடத்திலிலேயே உயிரிழந்துள்ளார்.

புதுக்குடியிருப்பிலிருந்து வவுனியா நோக்கி பயணித்த தனியார் பேரூந்து ஒமந்தை விளக்குவைத்தகுளம் பகுதியில் துவிச்சக்கரவண்டியொன்றினை முந்திச்செல்ல முற்பட்ட சமயத்தில் துவிச்சக்கரவண்டியில் பயணித்த நபர் பேரூந்தின் பின்பகுதி சில்லில் மோதுண்டு சம்பவ இடத்திலிலேயே பலியாகியுள்ளார்.

இச் சம்பவத்துடன் தொடர்புடைய தனியார் பேரூந்தின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை ஒமந்தை போக்குவரத்து பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

கனகராயக்குளம் 561வது படைப்பிரிவினை சேர்ந்த 33வயதுடைய ரனசிங்க அராச்சிக்கே ரனுவீர ஒஸான் என்ற நபரே விபத்தில் உயிரிழந்தவராவார்.

சடலம் பிரேத பரிசோதனைகளுக்காக வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.





















Previous Post Next Post