அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி யாழ்.பல்கலைகழக மாணவர்கள் அனுராதபுர சிறைச்சாலையை நோக்கி நடைபவனியை ஆரம்பித்து உள்ளனர்.
யாழ்.பல்கலைகழக வளாகத்தினுள் உள்ள பரமேஸ்வரன் ஆலய முன்றலில் இருந்து இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 8.30 மணியளவில் குறித்த நடைபயணத்தை ஆரம்பித்து உள்ளனர்.
பல்கலைக்கழகத்தின் பரமேஸ்வரன் ஆலய முன்றலில் இன்று காலை ஆரம்பிக்கப்பட்ட இந்த நடைபவனி ஏ9 வீதியூடாக அனுராதபுரம் சிறைச்சாலையை சென்றடையவுள்ளது.
பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் தலைவர் கிருஷ்ணமேனன் தலைமையில் ஆரம்பிக்கப்பட்ட இப் பேரணியில் மாணவர்கள் அரசியல் வாதிகள் பொது மக்கள் எனப் பலரும் இணைந்து கொண்டுள்ளனர்
இதனைத் தொடர்ந்து இப் பேரணியில் பல்கலைக்கழகத்தின் கிளிநொச்சி மற்றும் வவுனியா வளாக மாணவர்களும் இணைந்து கொள்ளவுள்ளனர்.
குறித்த நடைப்பவனிக்கு பொதுமக்கள் மற்றும் அமைப்புக்களின் ஆதரவினை வழங்குமாறு பல்கலைக்கழக மாணவர்கள் ஒன்றியம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளுக்கு ஆதரவு தெரிவித்து யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.



யாழ்.பல்கலைகழக வளாகத்தினுள் உள்ள பரமேஸ்வரன் ஆலய முன்றலில் இருந்து இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 8.30 மணியளவில் குறித்த நடைபயணத்தை ஆரம்பித்து உள்ளனர்.
பல்கலைக்கழகத்தின் பரமேஸ்வரன் ஆலய முன்றலில் இன்று காலை ஆரம்பிக்கப்பட்ட இந்த நடைபவனி ஏ9 வீதியூடாக அனுராதபுரம் சிறைச்சாலையை சென்றடையவுள்ளது.
பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் தலைவர் கிருஷ்ணமேனன் தலைமையில் ஆரம்பிக்கப்பட்ட இப் பேரணியில் மாணவர்கள் அரசியல் வாதிகள் பொது மக்கள் எனப் பலரும் இணைந்து கொண்டுள்ளனர்
இதனைத் தொடர்ந்து இப் பேரணியில் பல்கலைக்கழகத்தின் கிளிநொச்சி மற்றும் வவுனியா வளாக மாணவர்களும் இணைந்து கொள்ளவுள்ளனர்.
குறித்த நடைப்பவனிக்கு பொதுமக்கள் மற்றும் அமைப்புக்களின் ஆதரவினை வழங்குமாறு பல்கலைக்கழக மாணவர்கள் ஒன்றியம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளுக்கு ஆதரவு தெரிவித்து யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


