கன்னியாகுமரியில் காதல் திருமணம் செய்துகொண்ட புதுமாப்பிள்ளை கழுத்து அறுக்கப்பட்ட நிலையில், சடலமாக கண்டெடுக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம் கடேற்றி பகுதியைச் சேர்ந்த விஜீஸ் (32) என்பவர் கடந்த 4 மாதங்களுக்கு முன்னதாக, தனது பக்கத்து வீட்டை சேர்ந்த சிந்து என்ற பெண்ணை காதலித்து, வீட்டின் எதிர்ப்பை மீறி கடத்தி சென்று திருமணம் செய்துண்டுள்ளார்.
இந்த நிலையில் இரணியல் அருகே முக்கலம்பாடு பகுதியில் ஆண் ஒருவரின் சடலம் கிடப்பதாக பொலிஸாருக்கு தகவல் கிடைத்தது.
அங்கு விரைந்து சென்ற பொலிஸார் உடலை மீட்டு மேற்கொண்ட விசாரணையில் இறந்து கிடந்தது விஜீஸ் என்பதை கண்டறிந்தனர். பின்னர் அவருடைய உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
திருமணமான நான்கு மாதத்தில் புது மாப்பிள்ளை கொலை செய்யப்பட்டிருப்பதால் அப்பகுதி முழுவதும் பரபரப்பாக காணப்படுகிறது. கொலைக்கான காரணம் குறித்து பொலிஸாரும் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கன்னியாகுமரி மாவட்டம் கடேற்றி பகுதியைச் சேர்ந்த விஜீஸ் (32) என்பவர் கடந்த 4 மாதங்களுக்கு முன்னதாக, தனது பக்கத்து வீட்டை சேர்ந்த சிந்து என்ற பெண்ணை காதலித்து, வீட்டின் எதிர்ப்பை மீறி கடத்தி சென்று திருமணம் செய்துண்டுள்ளார்.
இந்த நிலையில் இரணியல் அருகே முக்கலம்பாடு பகுதியில் ஆண் ஒருவரின் சடலம் கிடப்பதாக பொலிஸாருக்கு தகவல் கிடைத்தது.
அங்கு விரைந்து சென்ற பொலிஸார் உடலை மீட்டு மேற்கொண்ட விசாரணையில் இறந்து கிடந்தது விஜீஸ் என்பதை கண்டறிந்தனர். பின்னர் அவருடைய உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
திருமணமான நான்கு மாதத்தில் புது மாப்பிள்ளை கொலை செய்யப்பட்டிருப்பதால் அப்பகுதி முழுவதும் பரபரப்பாக காணப்படுகிறது. கொலைக்கான காரணம் குறித்து பொலிஸாரும் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
